மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் கொழும்பு – பெலியத்த ரயில் மார்க்கத்தின் 23ஆவது மைல் அருகே நேற்று வியாழக்கிழமை (14) இரவு இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உயிரிழந்தவரின் அடையாளம் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சம்பவம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















