இந்திய மாநிலம் பஞ்சாபில் இந்திய விமானப்படை ஓடுபாதையை தாயும், மகனும் சேர்ந்து விற்றது அம்பலமாகியுள்ளது.
இந்திய விமானப்படையின் ஓடுதளம்
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகே உள்ள ஃபட்டுவாலா கிராமத்தில் அமைந்துள்ளது இந்திய விமானப்படையின் ஓடுதளம்.

கடந்த 1997ஆம் ஆண்டு இந்த இடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அதிகாரி நிஷான் சிங் என்பவர் அளித்த புகாரை ஆய்வு செய்தபோது இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
வழக்குப்பதிவு
இதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் போலி ஆவணங்களை தயார் செய்து தாய், மகன் சேர்ந்து விற்பனை செய்தது அம்பலமானது.
தற்போது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வினோத வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.