• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Wednesday, July 29, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கை செய்திகள்

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க எமது அரசு என்றும் தயங்காது

Yarl Thinakkural by Yarl Thinakkural
June 25, 2026
in இலங்கை செய்திகள், உள்ளூர் செய்திகள், சிறப்புச் செய்திகள், செய்திகள்
0
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க எமது அரசு என்றும் தயங்காது
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல் ஆகிய அனைத்தும் ஒடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான சட்டங்களும் அரச நிறுவனங்களும் உள்ளன என்றும் துரதிர்ஷ்டவசமாக தற்போது எதிர்க்கட்சியினரே இவற்றுக்கெல்லாம் பிரதான குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக மாறியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவது குறித்த பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

குற்றங்களை ஒடுக்குவதில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர பெரும் பங்காற்றி வருவதாகவும், இன்று அவர் எதிர்க்கட்சியின் எதிரியாக மாறியுள்ளார் என்றும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

இதேவேளை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அமைச்சர் ஆனந்த விஜேபால, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் திலீப பீரிஸ் மற்றும் நீதிமன்றமும் இன்று எதிர்க்கட்சியின் எதிரிகளாக மாறியுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

“இன்று நியாயம், நீதி, ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி என்பவற்றை எதிர்க்கட்சியால் தாங்கிக்கொள்ள முடியாமல் உள்ளது. அரசுக்குள்ளே இருந்து கொண்டு, அரச அனுசரணையுடன் குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்தால், அந்த குற்றவாளிகளை வெளிப்படுத்தக் கூடாதா? அது நாட்டை காட்டிக்கொடுப்பதா? அது தேசத்துரோகமா? இல்லை, அது ஒரு நாகரீகமான அரசை கட்டியெழுப்பும் நோக்கமாகும். எமது அரசை நாம் ஒரு நாகரீகமான அரசாக மாற்ற வேண்டும்.”

“நமது நாடு ஒரு ஊழல் நிறைந்த அரசாக இருந்தது. எமது இராணுவம், புலனாய்வுப் பிரிவினர் மீதான கௌரவம், பாராட்டு மற்றும் விசுவாசம் எமக்கு உள்ளது. ஆனால், எமது இராணுவமும் புலனாய்வுப் பிரிவினரும் நாட்டின் பாதுகாப்புக்காகவும், மக்களின் பாதுகாப்புக்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும்போது, அவர்கள் எங்கேனும் அநீதிக்குள்ளானால் நாம் அவர்களுக்காக முன்னிற்போம். உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மக்களின் பாதுகாப்புக்காகவும், நாட்டின் பாதுகாப்புக்காகவும் இராணுவமும் புலனாய்வுப் பிரிவும் செயற்பட்டிருந்தால், அவர்களை எந்த இடத்திலும் பாதுகாக்கவும் கௌரவிக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். அந்தப் பணியை நாம் செய்வோம்.”

“ஆனால், இராணுவத்திலோ அல்லது புலனாய்வுப் பிரிவிலோ உள்ள ஒரு சிறிய குழுவினர், ஏதேனும் ஒரு குடும்பத்தின் அதிகாரத்துக்காக அல்லது ஒரு அரசியல் முகாமின் அதிகாரத்துக்காக அரச தேவையின் பேரில் குற்றங்களைச் செய்திருந்தால், அவர்களுக்குரிய தண்டனையை வழங்க எமது அரசாங்கம் தயங்காது.”

“தங்கள் அதிகாரத்துக்காக, ஒரு குடும்பத்தின் மற்றும் தங்கள் அரசியல் முகாமின் அதிகாரத்துக்காகச் செய்யப்பட்ட குற்றங்களான தாஜுதீன் விவகாரமும் அப்படித்தான், ஈஸ்டர் தாக்குதலும் அப்படித்தான்… இவற்றின் பின்னணியில் மிகச் சிறிய அரச இயந்திரத்தின் இயக்குநர்கள் இருந்தனர். இதனை நாட்டுக்கு வெளிப்படுத்தக் கூடாதா? நாட்டில் வெள்ளை வென் பயம் இருக்கவில்லையா? இலக்கத் தகடுகள் இல்லாத வெள்ளை வென்களில் வந்து, தங்கள் காணியில் வீட்டை உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மனிதர்களைக் கடத்தினார்கள். இவை சிவில் மோதல்கள் அல்ல. ஒரு சிறிய குழுவினர் தங்களின் அரசியல் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு இக்கொடூரக் கொலைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்த நாம் நிச்சயமாகக் கடமைப்பட்டுள்ளோம்.”

இதற்கு விபரீதமாக அல்லது எதிராகச் செயற்படக்கூடியவர்கள் இக்குற்றங்களினால் லாபம் ஈட்டியவர்கள் மாத்திரமே எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளை யாராவது அச்சுறுத்தினால் அல்லது அழுத்தம் கொடுத்தால், அரசாங்கம் அவர்கள் சார்பில் முன்னிற்கும் என்றும், பொதுமக்களும் அவர்களுக்காக முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

“காலத்தின் மணல் துகள்களால் இவை மூடிப்போகும் என்று சிலர் நினைத்தார்கள். அதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். குற்றவாளிகளை முறையாக சட்டத்தின் முன் நிறுத்துவதே எமது கடமையாகும். விசாரணைகளை மேற்கொண்டு, கைது செய்து, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக வழக்குத் தாக்கல் செய்து, நீதிமன்றத்தின் மூலம் நாம் அவர்களுக்குத் தண்டனை வழங்குவோம். கொலைகளில் இருந்து காப்பாற்றுவதற்காகக் கப்பம் வாங்கிய ஒரு வரலாறு இருந்தது. இன்று காலையில் கைது செய்யப்பட்டவர்களின் இரகசியங்கள் உங்களுக்கு விரைவில் தெரியவரும். நீங்கள் இன்னும் அப்படிப்பட்டவர்களைக் கட்சியில் வைத்திருப்பீர்களா?”

“போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் வளர்வதற்கு அரசியல் அதிகாரமே துணையாக இருந்துள்ளது. இந்த விவகாரங்களுக்காக அரசியல் அதிகாரம் வழங்கும் அனைத்துப் பாதுகாப்புகளையும் நாம் முற்றிலும் ஒழிப்போம். யாரும் இதனை அரசியல் பழிவாங்கல் என்று கூற வேண்டாம். எமக்கு எதற்காக அதிகாரம் வழங்கப்பட்டது? ஒரு பாரிய மக்கள் ஆணை இருந்தது. அதற்குள் ஒரு சாராம்சம் இருந்தது. அதுதான் எமது அரசை நாகரீகமான ஒன்றாக மாற்றுவதாகும். பாராளுமன்றம் நாகரீகமானதாக மாற வேண்டும்.”

“இந்த நாட்டுக்கு மீண்டும் நாகரீகத்தைக் கொண்டுவரும் பொறுப்பே எமக்கு வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திற்குள்ளும், அரச நிறுவனங்களுக்குள்ளும், இவை அனைத்துக்குள்ளும் மீண்டும் நாகரீகத்தைக் கொண்டுவரும் போராட்டத்திலேயே நாம் ஈடுபட்டுள்ளோம்…”

“பணம் நாட்டிலிருந்து வெளியே கடத்தப்பட்டுள்ளது… அவை இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சிலரை நாம் கைது செய்துள்ளோம். விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஊழல் மூலம் ஈட்டப்பட்ட செல்வமே டொலர்கள் ஊடாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளது. இலங்கைக்குள் அது ரூபாய்களாக இருக்கலாம், ஆனால் நாட்டிலிருந்து கடத்தப்பட்டது டொலர் வடிவத்திலாகும். இந்நாட்டின் பொருளாதாரமும் சமூகக் கட்டமைப்பும் வீழ்ச்சியடைவதற்கு ஊழலே காரணமாக இருந்துள்ளது. எவருக்கும் தனிப்பட்ட பழிவாங்கும் எண்ணமோ, குரோதத்தைத் தீர்த்துக்கொள்ளும் தேவையோ எமக்குக் கிடையாது. இது பழிவாங்கல் அல்ல. போதைப்பொருள் பணம், குற்றவாளிகளின் பணம், ஊழல் மூலம் ஈட்டப்பட்ட பணம் என அனைத்தும் TT (Telegraphic Transfer) ஊடாகவே சென்றுள்ளன.”

“இந்நாட்டின் பொதுமக்களுக்கு ஊழல், மோசடிகளுக்கு எதிராகத் தண்டனை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பிற்கு உயிர் கொடுக்கும் அரசாங்கமாக நாம் மாறி வருகிறோம். அதை நாம் செய்வோம். சிலர் தங்களது உயிரைப் பணயம் வைத்தே இந்த விசாரணைகளை மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு எனது நன்றிகள். அதற்கமைய, பெருமளவிலானோருக்கு நாம் பிடியாணை பெற்றுள்ளோம். பெருமளவிலானோர் நீதிமன்றத்தை எதிர்கொள்ள முடியாமல் தப்பியோடியுள்ளனர். இது பழிவாங்கல் அல்ல. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தங்களைப் பற்றிய தரவுகளை நீதிமன்றத்தில் முறையாக முன்வைத்து, விடுதலையாவதற்கான உரிமை உண்டு.”

Previous Post

ரோஹித ராஜபக்ஷ மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் ஆஜர்

Next Post

கிரிஷ் வழக்கில் வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணை

Related Posts

மாளிகாவத்தையில்  இளைஞன் கைது!
இலங்கை செய்திகள்

போதைப்பொருளுடன் மேள வாத்தியக் கலைஞர் கைது

July 28, 2026
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு தேவையில்லை
இலங்கை செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு தேவையில்லை

July 28, 2026
செம்மணி மனித புதைகுழி பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி
இலங்கை செய்திகள்

செம்மணி மனித புதைகுழி பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி

July 28, 2026
சுரேஷ் சலேயின் ரிட் மனு பரிசீலனை மீண்டும் ஒத்திவைப்பு
இலங்கை செய்திகள்

சுரேஷ் சலேயின் ரிட் மனு பரிசீலனை மீண்டும் ஒத்திவைப்பு

July 28, 2026
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
உலக செய்திகள்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

July 28, 2026
Next Post
கிரிஷ் வழக்கில் வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணை

கிரிஷ் வழக்கில் வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
இனப்படுகொலைக்கு நீதி கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலைக்கு நீதி கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்

May 19, 2026
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
மாளிகாவத்தையில்  இளைஞன் கைது!

போதைப்பொருளுடன் மேள வாத்தியக் கலைஞர் கைது

July 28, 2026
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு தேவையில்லை

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு தேவையில்லை

July 28, 2026
செம்மணி மனித புதைகுழி பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி

செம்மணி மனித புதைகுழி பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி

July 28, 2026
சுரேஷ் சலேயின் ரிட் மனு பரிசீலனை மீண்டும் ஒத்திவைப்பு

சுரேஷ் சலேயின் ரிட் மனு பரிசீலனை மீண்டும் ஒத்திவைப்பு

July 28, 2026

Recent News

மாளிகாவத்தையில்  இளைஞன் கைது!

போதைப்பொருளுடன் மேள வாத்தியக் கலைஞர் கைது

July 28, 2026
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு தேவையில்லை

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு தேவையில்லை

July 28, 2026
செம்மணி மனித புதைகுழி பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி

செம்மணி மனித புதைகுழி பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி

July 28, 2026
சுரேஷ் சலேயின் ரிட் மனு பரிசீலனை மீண்டும் ஒத்திவைப்பு

சுரேஷ் சலேயின் ரிட் மனு பரிசீலனை மீண்டும் ஒத்திவைப்பு

July 28, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • போதைப்பொருளுடன் மேள வாத்தியக் கலைஞர் கைது July 28, 2026
  • நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு தேவையில்லை July 28, 2026
  • செம்மணி மனித புதைகுழி பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி July 28, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.