-சப்தசங்கரி-
கிளிநொச்சியில் அமைந்துள்ள ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதைய அதிபர் ஓய்வு வயதையும் தாண்டி கடமையாற்றுகின்ற நிலையில் துடிப்புடன் செயற்பட்ட உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டமை மாணவர்களின் நலன்களை பாதிக்கும். எனவே இந்த இடம்மாற்றத்தை இரத்து செய்ய வலியுறுத்தியும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


















