தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட நேற்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் தனது கடமைகளை முற்பகல் அவர் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
மேஜர் ஜெனரல் நியங்கொட நேற்று முன் தினம் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவிடம் இருந்து தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டிருந்தார்.


















