-பா.சதீஸ்-
கரைதுறைப்பற்று பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் கிளையினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் குறை நிவர்த்தி நடமாடும் சேவையொன்று நேற்றுமுன்தினம் பிரதேச செயலாளர் இ.விஜயகுமார் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய பிரதிப் பதிவாளர் நாயகம் ப. பிரபாகர் கலந்து கொண்டு நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த பொதுமக்களின் பிறப்பு, இறப்பு, விவாகம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.
70ற்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் , மேலதிக மாவட்ட பதிவாளர், நன்னடத்தை உத்தியோகத்தர், கிராமிய பதிவாளர், கிராம உத்தியோகத்தர்கள், பாரதி சிறுவர் இல்ல உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நடமாடும் சேவைக்கு பெரண்டினா, முல்லைத்தீவு நிறுவனம் நிதி அனுசரணையினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















