உலகப் பாரம்பரிய சுற்றுலாத் தளமான சிகிரியாவில் கண்ணாடிச் சுவரை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் நேற்று சிகிரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவிசாவளையைச் சேர்ந்த 21 வயதுடைய அவர் சிகிரியாவிற்குச் சுற்றுலா சென்றிருந்தபோது இந்தச் செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது.




















