இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெற வேண்டிய அவசியமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒக்டோபர் 15 முதல் அமுலுக்கு வந்த இந்தத் தேவையை மீளப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
புதிய உத்தரவின்படி அனைத்து மின்னணு பயண அங்கீகாரம் மற்றும் விசா வழங்கும் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை தற்போதுள்ள நடைமுறைகளின் கீழ் தொடர்ந்து செயல்படும்.
எனவே பயணிகள் அக்டோபர் 15க்கு முன்பு இருந்த அதே செயல்முறையின் கீழ் விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


















