செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 100ஆவது நாளை கடந்து இன்றைய தினம் சனிக்கிழமை 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பட்டன.
இதுவரையிலான 101 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 515 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 506 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 47ஆவது நாளான நேற்றைய தினம் சனிக்கிழமை 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை எழுமாறாக தோண்டப்பட்ட சோதனைக்குழிகள் இரண்டில் ஒரு குழியில் இருந்து மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


















