கரந்தெனிய காவல் பிரிவுக்குட்பட்ட கொட்டவெல பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில் தாயும் அவரது மகனும் மர்மமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் அவர்கள் வீட்டில் நடைபெற்றுள்ளதாகவும், உயிரிழந்தவர்கள் 75 வயதுடைய பெண் மற்றும் 25 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் விசாரணைகளில் உயிரிழந்த இளைஞர் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டி ஓட்டுநராக பணியாற்றி வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. எனினும் இந்த இரட்டை கொலைக்கான காரணம் அல்லது குற்றத்தை புரிந்தவர்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
சம்பவம் குறித்து கரந்தெனிய காவல்துறையினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















