நாட்டின் பதிப்புரிமைச் சட்டத்தை வலுப்படுத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அறிவுசார் சொத்துச் சட்டத்தின் கீழ் உள்ள பதிப்புரிமை தொடர்பான சட்ட நிலைமைகளை, சர்வதேச சட்டப் போக்குகளுக்கு இணங்க வலுப்படுத்துவதற்காக, அறிவுசார் சொத்துத் துறை, சட்டத்துறை மற்றும் பிற அமைச்சுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியவாறு இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பதிப்புரிமைச் சட்டத்தை வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் வர்த்தக அமைச்சில் அண்மையில் நடைபெற்றது.
இதன் போது இசைத்துறையின் பதிப்புரிமை தொடர்பாக சர்ச்சை எற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு, நேர்மறையான தீர்வுகளை வழங்குவதற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதே இந்தக் குழுவின் நோக்கமாகும்.















