முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக ‘நீல அறிவித்தல்’ (Blue Notice) ஒன்றை விடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சர்வதேச பொலிஸாரிடம் (Interpol) கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டு உட்பட 3 குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


















