2026 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த போலி வரைவு சட்டமூலத்தை சமூக ஊடகங்களில் பரப்பியதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ வரைவாக தவறாக முன்வைக்கப்பட்ட ஆவணம், அமைச்சகத்தாலோ அல்லது அதனுடன் இணைந்த எந்தவொரு நிறுவனத்தாலோ வெளியிடப்படவில்லை.
போலி ஆவணத்தை உருவாக்கி விநியோகித்ததன் பின்னணியில் உள்ள நபர்களை அடையாளம் காண விசாரணைகள் நடந்து வருகின்றது. விசாரணைகள் முடிந்ததும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்படுமென அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா மேலும் தெரிவித்தார்.















