மதுவரி உத்தியோகத்தர்களில் 20 முதல் 30 சதவீதமானோர் மோசடியாளர்கள். நிலைமை மாறிவிட்டது. ஆகவே பழைய பழக்கத்தை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் என்.எச். பிரேமரத்ன தெரிவித்தார்.
அகில இலங்கை மதுவரி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 74 ஆவது வருடாந்த மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் மதுவரி திணைக்களம் முக்கிய பங்கு வகிக்கிறது. அரச வருமானத்தை ஈட்டித்தரும் துறைகளில் மதுவரித் திணைக்களம் பிரதானவொன்றாக காணப்படுகிறது.
நடப்பாண்டில் 242 மில்லியன் ரூபா என்ற இலாப இலக்கினை அடைந்துள்ளோம். இந்த இலாபத்தை மேலும் எம்மால் அதிகரித்துக்கொள்ள முடியும்.
சட்டவிரோத மதுபான உற்பத்திகளை தடுப்பது மற்றும் அனுமதிப்பெறகிளவுட் சேவை செயலிழப்பால் இணைய சேவைகளில் தற்காலிக இடையூறுகள்
இலங்கை அரச கிளவுட் சேவையில் ஏற்பட்ட ஒரு செயலிழப்பு காரணமாக, பல அரச நிறுவனங்களால் இயக்கப்படும் இணைய சேவைகளில் தற்காலிக இடையூறுகள் தொடர்வதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த இடையூறுகளில் இருந்து உடனடியாக மீட்டெடுக்க பொறியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் கூட்டுக் குழு 24 மணிநேரமும் பணியாற்றி வருவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும் இந்தச் சம்பவத்தால் எந்த தரவு இழப்பு அல்லது பாதுகாப்பு வழிமுறைகளும் பாதிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தரவுகள் தொடர்ந்தும் பாதுகாப்புடன் உள்ளதாகவும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்காக பிரதேச செயலகங்கள் ஊடாக சான்றிதழ்களின் நகல்களைப் பெறுவது உள்ள தாக்கம் செலுத்தக்கூடிய சேவைகளுக்கான மாற்றி வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்தச் சேவைகளில் பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் அமைப்பு, மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (மேல் மாகாணம் தவிர) இணையவழியிலான வருமான வரி அமைப்பு, பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் அமைப்பு, வணிகத் திணைக்களத்தின் இணைவழியூடான நாட்டின் உற்பத்தி சான்றிதழ் வழங்கும் முறை, ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வூதிய அமைப்பு, வளிமண்டலவியல் திணைக்களம், நிறுவனப் பதிவாளர் திணைக்களம் மற்றும் இலங்கையின் கணக்கியல் மற்றும் கணக்காய்வு தரநிலைகள் சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் இணையத்தளங்கள் செயலிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
;ற மதுபான நிலையங்களிடமிருந்து வரிகளை பெறுவது திணைக்களத்தின் பிரதான பணியாகும்.
மதுவரி உத்தியோகத்தர்களில் 20 முதல் 30 சதவீதமானோர் மோசடியாளர்கள் என்பதை குறிப்பிட வேண்டும். கடந்த காலங்களில் எவ்வாறு செயற்பட்டார்களோ அவ்வாறே தற்போதும் செயற்படுகிறார்கள். நிலைமை மாறிவிட்டது. ஆகவே பழைய பழக்கத்தை திருத்திக்கொள்ளுங்கள். சட்டத்துக்கு அமைய சிறந்த முறையில் செயற்படுங்கள் என்று குறிப்பிட்டுக்கொள்கிறேன் என்றார்.

















