மஹர சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், அங்கு ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சட்டத்தின் சட்டகத்துக்குள் நின்று செயல்படுமாறும், மனித உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறும், மேலும் சேதங்களைக் குறைப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் அதிகாரிகளை நாங்கள் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என -சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு -கேட்டுக்கொண்டுள்ளது.


















