மாத்தறை மாவட்டத்தில் டெங்குவுடன் சேர்ந்து சிக்கன்குனியாவும் அதிகரித்துள்ளதாக சுகாதார நுண்ணுயிர் அதிகாரிகள் தலைவர் நிஜித் சுமனசேன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: இலங்கையில் தற்போது நிலவும் தொடர்ச்சியான மழையின் காரணமாக டெங்கு பரவும் பருவமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் மாத்தறைப் பகுதியில் சிக்கன்குனியா வேகமாக பரவி வருகிறது.
இந் நோய் பரவல் முன்னர் நாரஹேன்பிட்டி மற்றும் கொழும்பின் சில பகுதிகளில் பதிவாகியிருந்த நிலையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இருப்பினும் கடந்த சில மாதங்களாக மாத்தறையில் இந் நோய் பரவி வருகின்றமையை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானது. சிக்கன்குனியாவின் முதன்மை நோய் பரப்பி டெங்கு நுளம்பைப் போன்ற ஒரு நுளம்பினமாகும் என்றார்.















