உயர்தர தொழிநுட்பத் துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவன் சுகயீனத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு கற்சிலைமடுவைச் சேர்ந்த செல்வன் பாணுசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிப்புக்குள்ளாகியிருந்தார்.
சிறுநீரக மாற்று சிகிச்சை பயனளிக்காமல் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
உயர்தர தொழிநுட்பத் துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற இம்மாணவன் குடும்பத்திற்கு ஒரேயொரு பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கது.


















