-சொ.வர்ணன்-
எமது மீனவ சமூகம் தனக்கே உரித்தான கடலில் அயல் நாட்டு மீனவர்களின் அத்துமீறல்கள் இல்லாது சுதந்திரமாக மீன்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என மன்னார் சமூக அபிவிருத்திக்கான மையத்தின் இணைப்பாளர் ஜோன்சன் பிரிடாரோ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அயல் நாடொன்றின் மீனவர்கள் தொடர்ச்சியாக அழித்து வருகின்றனர். இந்நிலையில் அதனை தட்டிக்கேட்க முடியாத இனமாக கூணிக்குறுகி நிக்கிறோம்.
இதன் காரணமாக எமது மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படு வருகின்றது. இதற்கு எதிர்ப்பு வெளியிடுமுகமாக மீனவ சமூகம் தரையிலும் கடலிலும் பல கவனயீர்ப்புப் போராட்டங்களை மேற்கொண்டும் எல்லை தாண்டுவது நிறுத்தப்படவில்லை.
எமது மீனவ சமூகம் தனக்கே உரித்தான கடலில் அயல் நாட்டு மீனவர்களின் அத்துமீறல்கள் இல்லாமல் சுதந்திரமாக மீன்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இதற்கு உரியவர்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றார்.















