-பா.சதீஸ்-
மக்கள் வங்கி இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையுடன் இணைந்து நடாத்திய 2025 ஆம் ஆண்டிற்கான People’s Bank Biz Teen Entrepreneurship Challenge போட்டியில் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவி சாதனை படைத்துள்ளார்.
நாடு முழுவதிலும் இருந்து 500 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுடன் இவ்வருடம் பெப்ரவரி மாதம் கொழும்பில் இடம்பெற்ற தொழில்முனைவோர் சவால் தேசியப் போட்டியில், முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவி மனோகரன் ஸஹானி தேசிய மட்ட வெற்றியாளராக (National Winner -Merit Award) தேர்வு செய்யப்பட்டார்.
அத்தோடு இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச்சபை தேசிய மட்டத்தில் 13 வெற்றியாளர்களை தேர்வு செய்து People’s Biz Teen Challenge 2025 நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


















