மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் ஓராண்டு நினைவை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நினைவஞ்சலி கூட்டமும் ‘பாரதி ஒரு மனிதநேய ஊடகன்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வும் நடைபெற்றது.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும், லண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் ‘பாரதி ஒரு மனிதநேய ஊடகன்’ என்ற மலரின் பிரதி வெளியிடப்பட்டதுடன் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் உரையாற்றினர்.


















