யாழ்ப்பாணம் – அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிக் கொண்டிருந்த சிறிய ரக கன்டர் வாகனத்தை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாண பிரதான பொலிஸ் பரிசோதகர் பாலித்த செனவிரட்னவின் பணிப்புரையில் குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் இலக்கத் தகடு அற்று மணல் ஏற்றிக் கொண்டிருந்த குறித்த வாகனத்தை கைப்பற்றினர்.
சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















