-சு.பாஸ்கரன்-
இலங்கை வந்துள்ள இந்திய இராணுவப் பொறியியல் பிரிவினர் வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த பாலங்களை இலங்கையின் பல பகுதிகளில் அமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
அந்த வகையில் பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியின் பதினொராவது கிலோமீற்றரில் அமைந்திருந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்த பாலத்தினை புனரமைப்பது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று மாலை கலந்துரையாடியிருந்தனர்.
நேற்று பிற்கல் கிளிநொச்சிக்கு வருகை தந்த இந்திய இராணுவ பொறியியலாளர் மேஜர் ANGAD SING GURM தலைமையிலான இந்திய இராணுவப் பொறியியல் குழுவினர் புனரமைப்பு பணிக்கான ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.
















