அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில், முறையான வீதி விதிமுறைகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு ஊர்காவற்றுறை பொலிஸாரால் வேலணை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு முன்னெடுக்கப்பட்டது.
வேலணை மத்திய கல்லூரி அதிபரது முழுமையான ஒத்துழைப்புடன் ஊர்காவற்றுறை வீதிப் போக்குவரத்து பிரிவுப் பொலிஸாரின் ஒழுங்கமைப்பில் குறித்த விழிப்புணர்வு இன்றையதினம் காலை வேலணை மத்திய கல்லூரியின் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரபாகரனின் பிரசன்னத்துடன் ஊர்காவற்றுறை வீதிப் போக்குவரத்து பிரிவு உதவி பொலிஸ் அதிகாரி சமன் குமார தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த விழிப்புணர்வில் வீதி ஒழுங்கு தொடர்பில் மாணவர்களுக்கு செயன்முறைகளூடாக விளக்கங்கள் கொடுக்கப்பட்டதுடன் முறையற்ற போக்குவரத்து முறைகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் விளக்கமளிக்கப்பட்டது.
ஊர்காவற்றுறை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு செயலமர்வில் வேலணை மத்தியகல்லூரியின் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


















