-பா.சதீஸ்-
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்ததையடுத்து தடைப்பட்டுள்ள போக்குவரத்து இன்று மாலை முதல் வழமைக்கு திரும்புவதற்கான வாய்ப்புள்ளது.
அண்மைய நாட்களாக பெய்த கனமழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து நீர் பாய்கின்றது. இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் தடைப்பட்டுள்ள போக்குவரத்தை சீர் செய்யும் பணி இரவு பகலாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் தேவையின் நிமித்தம் முல்லைத்தீவிற்கு பயணம் செய்வோர் புதுக்குடியிருப்பு கேப்பாபிலவு வழியான மாற்று வழியினை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் வட்டுவாகல் பாலமூடான போக்குவரத்து பெரும்பாலும் இன்று மாலை முதல் வழமைக்கு திரும்புவதற்கான வாய்ப்புள்ளது.
















