பேரழிவைத் தடுக்க தவறியதாக அரசாங்கம் மீது வழக்கு தொடர நினைப்பது அபத்தமானது என கூறியுள்ள சரத் பொன்சேகா, எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நிலமை எனவும் கூறினார்.
கடந்த காலங்களிலும் வெள்ளம் ஏற்பட்டது. யார் ஆட்சியில் இருந்தாலும் இறுதி முடிவு ஒன்றுதான். இந்தமுறை மழையும் வெள்ளமும் அதிகமாக இருந்ததால் பேரழிவு கடுமையாக இருந்தது.
முந்தைய ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் நிலைமை இப்படித்தான் இருந்திருக்கும். இலங்கையில் வளங்கள், உபகரணங்கள் மற்றும் மனிதவளம் குறைவாக இருப்பதால் யாராலும் அற்புதங்களைச் செய்ய முடியாது. கிடைக்கக்கூடிய வளங்கள், உபகரணங்கள் மற்றும் மனிதவளத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் அதிகபட்சமாகச் செய்ய வேண்டும்.
யாராவது அதிகமாகச் செய்ய விரும்பினால், அது இங்கே சாத்தியமில்லை. நாம் ஒரு ஏழை நாடு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
















