வெள்ளத்தில் மூழ்கி பழுதடைந்த அரிசியை விற்பனை செய்ய முயற்சிக்கும் சம்பவங்கள் தொடர்பில் சுகாதாரப் பரிசோதகர்கள் கண்டறிந்துள்ளனர்.
கண்டி – ஹாரிஸ்பத்துவ பகுதியில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற 1,000 கிலோகிராம் அரிசியை விற்பனை செய்யத் தயார் செய்த சந்தேகநபர்கள் சிலருக்கு எதிராக இவ்வாறு சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இந்நாட்களில் தாம் கொள்வனவு செய்யும் அரிசி தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர். எவ்வாறாயினும், இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால், அப்பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்குமாறும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
















