கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் சீதுவை சந்திப்புப் பகுதியில் நான்கு நுழைவுப் பாதைகள் நேற்று செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்தது.
திறக்கப்பட்ட நுழைவுப் பாதைகளில் ஒரு மின்னணு சுங்க வரி வசூல் பாதை மற்றும் மூன்று ரிக்கெட் பாதைகள் அடங்கும். இவை, தினமும் அதிவேக நெடுஞ்சாலையில் நுழையும் ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு ஏற்படும் தாமதங்களை குறைத்து, 24 மணி நேரமும் செயற்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த முயற்சி வீதி மேம்பாட்டு ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். முன்பு சில சாரதிகள் நுவுஊ பாதையைப் பற்றி அறியாமல் அதன் வழியாக வாகனம் ஓட்டுவதால் தாமதங்கள் ஏற்பட்டதாகவும், இதனால் தற்போது அந்தப் பாதை நீல நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பகுதிக்கு வரும் வாகனங்களில் மணிக்கு 15 கிலோ மீற்றர் வேக வரம்பு விதிக்கப்பட்டு, சிக்கல்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.


















