-ஆராய்கிறது மகளிர் விவகார அமைச்சு-
பெண் அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் வகையில் முன்மொழிவு ஒன்று சமர்பிப்பது தொடர்பில் மகளிர் விவகார அமைச்சு ஆலோசித்து வருகிறது.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த இந்த ஆலோசனையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த மகளிர் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன, இந்த யோசனையை திறமையான மற்றும் மிகவும் அவசியமான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய தெற்காசிய நாடுகளுடன் (உதாரணமாக பாகிஸ்தான்) ஒப்பிடுகையில், இலங்கையின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பெண்களை அதிகளவில் வேலைவாய்ப்புச் சந்தையில் இணைத்துக்கொள்ள முறையான திட்டங்கள் நாட்டுக்குத் தேவை என்றும், இந்த முன்மொழிவு மிகவும் முற்போக்கானது என்றும் கூறினார்.
இது குறித்து அமைச்சரவை மட்டத்தில் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.


















