இந்திய இராணுவத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட 20 புதிய வாகனங்களை பயன்படுத்தி இலங்கை இராணுவம் ஆண்டுதோறும் சுமார் 18 மில்லியன் ரூபாவை சேமிக்கிறது.
இருநாட்டு இராணுவத்திற்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை அடையாளப்படுத்தும் வகையில், இந்திய இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தபோது இந்த வாகனங்கள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டன. இந்த வாகனங்களை பயன்படுத்தியே பணம் சேமிக்கப்படுகிறது.
இலங்கை இராணுவத்தின் கூற்றுப்படி, புதிதாக இணைக்கப்பட்ட ஜீப்புகள் நிர்வாக மற்றும் கள நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
முன்னதாக, இராணுவம் தனியார் துறையிலிருந்து வாகனங்களை வாடகைக்கு எடுத்து வந்தது, இதன் மாதச் செலவு சுமார் 1.5 மில்லியன் ரூபாய் ஆகும்.
இந்தப் புதிய வாகனங்கள் தனது படையில் சேர்க்கப்பட்டதன் மூலம், வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனங்களை இராணுவம் படிப்படியாக நீக்கியுள்ளது.
இதன் விளைவாக மாதந்தோறும் ரூ. 1.5 மில்லியன் சேமிக்கப்பட்டுள்ளது மற்றும் அரசாங்க செலவினங்களில் ஆண்டுக்கு ரூ. 18 மில்லியனுக்கும் அதிகமாக சேமிக்கப்பட்டுள்ளது.


















