தற்போது அனைவரும் சந்திக்கின்ற ஒரு பிரச்சனைதான் இந்த வறட்டு இருமல். இந்த இருமலை பொறுத்த வரை சளியினால் ஏற்படுவது இல்லை. அதற்கு மாற்றாக வைரஸ் அல்லது இதர தொற்றுகள் காரணமாக, இந்த வறட்டு இருமல் பிரச்சனை ஏற்படுகின்றது. இந்த வறட்டு இருமல் வந்துவிட்டால் தொண்டையில் எரிச்சலை உண்டாக்கும்.
இந்த வறட்டு இருமல் சரியாக பின்வரும் இயற்கை கை வைத்திய முறைகளைப் பின்பற்றலாம்.
மஞ்சள் பால்

மஞ்சளில் உள்ள குர்குமினில், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகளவு அடங்கியுள்ளது.
இது நோய்த்தொற்றுக்களை சரிசெய்ய உதவுகிறது. அதேபோல் வறட்டு இருமல் குணமாக பெரிதும் இந்த மஞ்சள் பால் உதவுகிறது.
எனவே ஒரு டம்ளர் சூடான பாலில், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் உடனே வறட்டு இருமல் குணமாகும்.
இஞ்சி

இஞ்சியில் அதிகளவு அழற்ஜி எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது. மேலும் இது காரச் சுவையுடையது. வறட்டு இருமல் சரியாக இது ஒரு சிறந்த நிவாரணமாக உள்ளது.
எனவே, ஒரு துண்டு இஞ்சியை வாயில் நாள் முழுவதும் போட்டு மெல்லுங்கள். இதனால் வறட்டு இருமல் குணமாக இஞ்சி பெரிதும் உதவுகிறது. மேலும் செரிமான பிரச்னையும் சரியாகி, உடலின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.
எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள மருத்துவ குணங்கள் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
அதே போல் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி வறட்டு இருமலை உண்டாக்கும் கிருமிகளை நோக்கி எதிர்த்து போராடி நமக்கு வறட்டு இருமல் வராமல் பாதுகாக்கிறது.
எனவே, தினமும் பலமுறை இரண்டு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடனே இந்த வறட்டு இருமல் குணமாகும்.
தேன்

தேன் இருமலுக்கு ஒரு சிறந்த நிவாரணமாக அமைந்துள்ளது. இந்த தேனை 5 டேபிள் ஸ்பூன் எடுத்து கொண்டு,10 அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, அடுப்பில் வைத்து சூடேற்றி, பின்பு அதனை ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் இந்த வறட்டு இருமல் பிரச்சனை உடனே சரியாகும்.
கற்றாழை ஜெல்

கற்றாழையில் உள்ள மருத்துவ பண்புகள், வறட்டு இருமலுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும்.
இதில் உள்ள வலி நிவாரணப் பண்புகள், தொண்டைச் சுவற்றில் பாதிக்கப்பட்ட திசுக்களை சரிசெய்யும்.
அதிலும், கற்றாழை ஜெல் ஜூஸில் தேன் கலந்து ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், வறட்டு இருமல் குணமாகும். மேலும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும்.
வெங்காயம்

வெங்காயம் பொதுவாக வறட்டு இருமலை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது. மேலும் வெங்காயத்தில் உள்ள ஆன்டி – பாக்டீரியா மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகளவு நிறைந்துள்ளது.
எனவே, வெங்காயம் நோய்தொற்றுகளில் இருந்து எதிர்த்து போராடி, உடலுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கின்றது.
எனவே 1/2 ஸ்பூன் வெங்காய சாற்றுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து தினமும் இரண்டு முறை அருந்தி வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
ஆவி பிடித்தல்

யூகலிப்டஸ் எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியா மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகளவு உள்ளது.
எனவே, வறட்டு இருமலுக்கு ஒரு நல்ல நிவாரணம் அளிக்கிறது. எனவே ஒரு அகலமான பாத்திரத்தில் நன்கு கொதிக்க வைத்த வெந்நீரை நிரப்பி, அதில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து, 15 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும்.
இப்படி சில நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், வறட்டு இருமல் குணமாகும்.
மசாலா டீ

வறட்டு இருமல் சரியாக தினமும் மசாலா டீ அருந்தி வரலாம். மசாலா டீயை தினமும் அருந்தி வருவதினால் அவற்றில் இருக்கும் மருத்துவப்பொருட்களான இஞ்சி, பட்டை, கிராம்பு போன்ற பொருட்கள் தொண்டையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் உடனே சரி செய்து விடும்.
எனவே, தினமும் மசாலா டீ குடித்து வந்தால் வறட்டு இருமல் பிரச்சனை குணமாவதுடன், தொண்டையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் உடனே சரியாகும்.


















