-முடி வெட்டி வெந்நீரில் குளிப்பாட்டினர்-
ஹட்டன் நகரில் யாசகம் செய்வோரை ஹட்டன் காவல்துறை அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒரு முன்மாதிரியான செயலைச் செய்துள்ளனர்.
ஹட்டன்- டிக்கோயா லெதண்டி சமூக காவல் பிரிவுடன் இணைக்கப்பட்ட ஏழைகளின் நண்பர்கள் அமைப்பின் இளைஞர் குழுவுடன் இணைந்து ஹட்டன் சமூக காவல் பிரிவு யாசகர்களின் தலைமுடி மற்றும் தாடியை வெட்டி வெந்நீரில் குளிப்பாட்டி, புதிய ஆடைகளை வழங்கியதுடன் மதிய உணவையும் வழங்கியது.
ஹட்டன் பிரதேச காவல் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகரவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சேவையை ஹட்டன் தலைமையக தலைமை ஆய்வாளர் டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாச மற்றும் சமூக காவல் பிரிவின் பொறுப்பதிகாரி, தலைமை ஆய்வாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் மேற்கொண்டனர்.
ஹட்டன் நகரில் சுற்றித் திரியும் உறவினர்களைக் கொண்ட யாசகர்களை நீதிமன்றம் மூலம் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


















