-ஐ.நா பொதுச்செயலாளர் கவலை-
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் ஏற்கனவே ‘கட்டுப்பாட்டை மீறிவிட்டது’ என்றும், உலகம் தற்போது ‘ஒரு பெரிய அளவிலான போரின் விளிம்பில்’ உள்ளது என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக நடத்தும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர இதுவே ‘சரியான நேரம்’ என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
இந்த மோதலில் சம்பந்தப்படாத அண்டை நாடுகள் மீதான தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
‘இராணுவ மோதல்களைத் தீவிரப்படுத்துவதற்கான நேரம் வரவில்லை, மாறாக இராஜதந்திரத் தீர்வுகளை நோக்கி நகர்வதற்கான நேரம் வந்துவிட்டது. அனைத்துத் தரப்பினரும் சர்வதேச சட்டத்தை முழுமையாக மதித்து, அமைதியைக் கொண்டுவரப் பாடுபட வேண்டும்,’ என்று பொதுச்செயலாளர் கூறினார்.


















