கொழும்பில் நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை இரண்டு தனித்தனியான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
நேற்று இரவு 11.45 மணியளவில் கிராண்ட்பாஸ் மஹாவத்த மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ரிவோல்வர் துப்பாக்கியால் ஒருவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 1.40 மணியளவில் மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்த வீதியில் அமைந்துள்ள வங்கியொன்றுக்கு முன்பாக இரண்டு ஆயுததாரிகள், ஒருவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.


















