புதிய கல்வி சீர்திருத்தத்தில் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட கல்வி திட்டத்தை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன. ஒரு பாடவேளை 50 நிமிடங்கள் நீடிக்கப்படுவது மொத்த செயற்பாட்டின் பொறுப்பாளர்களின் அடிப்படையில் இடம்பெறும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்தார்.
எதிர்வரும் வருடத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள புதிய கல்வி சீர்திருத்த செயற்பாட்டின் தற்போதைய நிலை மற்றும் அதனை முன்னிட்டு இடம்பெறும் பாடசாலை நேரம் 30 நிமிடங்கள் நீடிக்கப்படுதல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடக சந்திப்பு நேற்று வியாழக்கிழமை கல்வி அமைச்சில் இடம்பெற்ற போதே கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கழுவெவ இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்: வெளியிடப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தம் புதிய கல்வி பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் விதமாக 2026ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய கல்வி மாற்றத்திற்காக பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிக்கும் பணிகள் தேசிய கல்வி நிருவகத்தினால் இடம்பெற்று வருவதுடன் அதில் 99% வீதமளவில் முடிவுறுள்ளது. அவ்வாறு 1 மற்றும் 6 தரங்களுக்கான சம்பந்தப்பட்ட ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் பணிகள் 2025.12.31 ஆம் திகதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த இரண்டு தரங்களுக்காக ஒரு தவணைக்காக அவசியமான 106 மொடியூல்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அச்சிடப்பட்டு முடிவடைய உள்ளன.
தற்போது சமூகத்தில் அதிகம் பேசப்படும் பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களுக்கு நீடித்தல் தரம் ஐந்திலிருந்து ஏனைய தரங்களுக்கு மேற்கொள்ளப்படுள்ளன.
புதிய கல்வி சீர்திருத்தத்தில் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட கல்வி திட்டத்தை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன. ஒரு பாடவேளை 50 நிமிடங்கள் நீடிக்கப்படுவது மொத்த செயற்பாட்டின் பொறுப்பாளர்களின் அடிப்படையில் இடம்பெறும்.
அதற்கு ஈடாக புகையிரதம், இலங்கை போக்குவரத்துச் சபை போன்ற பொதுப்போக்குவரத்து சேவைகளின் நிறங்களை மாற்றுவது தொடர்பாகவும் புகையிரத திணைக்களம், போக்குவரத்து திணைக்களம், தேசிய போக்குவரத்துச் சபை போன்ற நிறுவனங்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வாறே எதிர்வரும் ஆண்டில் செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள புதிய கல்வி பரிமாற்றம் தொடர்பாக 9 மாகாணங்களையும் உள்ளடக்கியவாறு சகல கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அவை உதவிக்கட்டத்தை அடைந்துள்ளன.
அவ்வாறே இது தொடர்பாக பெற்றோர்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டங்கள் டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளன என்றார்.
அத்துடன் இந்த ஊடக கலந்துரையாடலில் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் உதவிப் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில்: இந்தப் பாடவிதானங்களை தயாரிக்கும் போது உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள கல்வி முறை தொடர்பாக பிறந்த மேற்பார்வை இடம்பெறுகின்றன.
சிறுவர்களின் மனப்பாங்கிற்கு ஏற்ற விதத்தில் எதிர்கால வேலை உலகிற்கு அவசியமான முறையில் இது தயாரிக்கப்பட்டுள்ளன. மேற்கொள்ளப்பட்ட கல்வி சீர்திருத்தத்தில் தரம் பத்திலிருந்து தொழிற்கல்விக்கு செல்வதற்கு அடிப்படை ஆரம்பங்கள் இடம் பெறுகின்றன.
எதிர்காலத்திற்கு கொண்டு செல்வதற்காக க. பொ. த. உயர் தரப் பாட விதானத்திலும் கல்வியை எதிர்காலத்திற்கு கொண்டு செல்லக்கூடிய விதமாக தயாரிக்கப்பட்டுள்ளன என்றனர்.

















