-த.சுபேசன், கஜிந்தன்-
சாவகச்சேரி நகராட்சி மன்றின் முன்னாள் நகரபிதா அமரர் இ.தேவசகாயம்பிள்ளையின் 4 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது.
நகரசபை தவிசாளர் வ. ஸ்ரீபிரகாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், அமரரின் குடும்பத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் நகரபிதா அமரர் இ.தேவசகாயம்பிள்ளையின் நினைவுப் பகிர்வை அமரரின் காலத்தில் உறுப்பினராக இருந்த தற்போதைய உபதவிசாளர் ஞா.கிஷோர், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் ஆற்றினார்கள்.


















