அனுமதிப் பத்திரமன்றி சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கைது நடவடிக்கை நேற்றையதினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் சுன்னாகம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஒரு டிப்பர் தப்பித்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மணல் கிளாலி பகுதியில் இருந்து சட்ட விரோதமாக எடுத்து வரப்பட்டபோதே இவ்வாறு கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















