யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் தியாகி திலீபனின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் இரத்ததான நிகழ்வு இன்று இடம்பெற்றது.
கலைப்பீட முன்றலில் கைலாசபதி கலையரங்கிற்கு அருகாமையில் தற்போது திலீபனை நினைவுகூரும் வகையில் இரத்த தானம் இடம்பெற்று வருகின்றது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த இரத்ததான நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அதிகமானோர் இணைந்து கொண்டு இரத்த தானம் செய்து வருகின்றனர்.


















