கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் திருகோணமலை மொரவெவ வடக்கு சிங்களக் கல்லூரி, அனுராதபுரம் மாவட்டத்தில் நாச்சதுவ அஃதிவுல்வெவ கல்லூரி வளாகம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் பேசாலை கிராமத்தில் நிறுவப்பட்ட மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஒக்டோபர் 14, 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் திறந்து வைக்கப்பட்டன.
கடற்படையின் தொழில்நுட்ப உதவியுடன் சுகாதார அமைச்சின் தலைமையின் கீழ் ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடன் ஒரு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளதுடன், கம்மெத்த சமூக நலத் திட்டத்தின் கீழ் Oasis Plant and Seeds Exporters உரிமையாளரின் நிதி பங்களிப்பு மற்றும் ஓய்வுபெற்ற பட்டய கணக்காளர் திரு. மற்றும் திருமதி. பி. சிவேந்திராவின் நிதி பங்களிப்புடன், இந்த இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இதன் மூலம் கடற்படையால் நியமிக்கப்பட்ட மொத்த நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை 1135 ஆக உயர்ந்துள்ளதுடன், இவ்வாறு பொதுமக்களுக்குத் திறக்கப்படும் 3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், திருகோணமலையில் உள்ள மொரவெவ வடக்கு சிங்களப் பள்ளிஇ அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள நாச்சதுவ அ/திவுல்வெவ பள்ளி மைதானம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பேசாலை கிராமத்தில் வசிக்கும் ஏராளமான மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் சுத்தமான குடிநீர் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.
மேலும் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் க்ளீன் ஸ்ரீலங்கா தேசியத் திட்டத்திற்கு இணங்க இலங்கைக் கடற்படையானது சுத்தமான குடிநீரை வழங்கும் இந்த சமூக சேவைக்கு தொடர்ந்து பங்களிக்கும்.


















