றோயல் கல்லூரியைச் சேர்ந்த செல்வன் ஜெயரூபன் ஹரிஷ், கல்வி அமைச்சு நடத்திய அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகளில், பேச்சுப் பிரிவு 5 இல் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 2000 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் பங்கேற்ற இந்த தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றி, செல்வன் ஹரிஷ் 2023 ஆம் ஆண்டிலும் பேச்சுப் பிரிவு 4 இல் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இதன் மூலம் அவர் தொடர்ந்து இரண்டு முறை தேசிய அளவில் முதலிடம் பெற்ற முதலாவது றோயல் கல்லூரி மாணவர் என்ற பெருமையை தனதாக்கியுள்ளார்.
ஹரிஷ், றோயல் கல்லூரி தமிழ் விவாத அணியின் தலைவராக ஏற்கனவே பல வெற்றிகளை தனதாக்கியுள்ளதுடன், றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்ற செயலாளராகவும் பொறுப்பேற்று தனது தமிழ் சார் அறிவை பிறருக்கு உதவும் வகையில் பயன்படுத்தியும் வருகிறார்.


















