இலங்கை கடலோர காவல்படையினருக்கு கிடைத்த சிறப்புத் தகவலின்படி, வென்னப்புவவின் வெல்லமங்கரை கடற்கரைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு கைவிடப்பட்ட முப்பத்து மூன்று பைகளில் அடைக்கப்பட்ட 1531 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடல் வழிகளில் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடலோர காவல்படையினர் நடத்திய சிறப்பு நடவடிக்கைகள் காரணமாக கைவிடப்பட்டதாக நம்பப்படும் இந்த பீடி இலைகள், மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

















