சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் செயலாளருமான, வாங் ஜூன்ஷெங் காலி கோட்டையில் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார்.
வாங் ஜூன்ஷெங் தலைமையிலான சீனக் குழுவினர், நேற்று முன்தினம் காலை காலி கோட்டைக்குச் சென்று கோட்டைச் சுவர்களை ஆய்வு செய்தனர்.
பிரதி அமைச்சர் நளின் ஹேவகே மற்றும் பலர் இந்த பயணத்தின் போது உடன் இருந்தனர்.
இதன்போது, சிறப்பு அதிரடிப்படையினர், காவல்துறையினர், கடற்படையினர் பலத்த பாதுகாப்பு வழங்கினர்.


















