-வலுப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்-
-சர்வதேச பயங்கரவாதத்துறை நிபுணர் ரொஹான் குணரத்ன-
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டு வரப்படும் சட்டமூல முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று சர்வதேச பயங்கரவாதத்துறை நிபுணர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
காலத்துக்கு காலம் பதவிக்கு வரும் அரசாங்கங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதாக அறிவிக்கின்றன.
எனினும் அரசியலுக்கு அப்பால் தேசிய நலன் என்ற அடிப்படையில் குறித்த முன்மொழிவு வலுப்படுத்தப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் இலங்கையில் சட்டங்கள் வலுவிழக்கும்போது, அவர்களின் எழுச்சி பெறக்கூடும்
நாட்டில் அவர்கள் சார்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகள் பகிரங்கமாகவே நடத்தப்படுகின்றன.
அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் வெளிநாடுகளில் வலுப்பெற்றுள்ளன. எனவே அரசாங்கம் புதிய சட்டத்தின்மூலம் இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என்றும் ரொஹான் குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம் பயங்கரவாத செயற்பாடுகள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளமையால், அது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவேண்டும் என்று அவர் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
















