-கஜிந்தன்-
யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவுச் சபையின் ஒன்றிணைந்த கூட்டுறவு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பல நோக்கு கூட்டுறவு சங்கங்களின் பொது முகாமையாளர்கள், கணக்காளர்கள் மற்றும் சமாசங்களின் பொது முகாமையாளர்கள், கணக்காளர்களுக்கான மாவட்ட மட்ட விசேட செயலமர்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் மாவட்ட பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் பொது முகாமையாளர்கள் மற்றும் கணக்காளர்களுக்கான செயலமர்வும் நடைபெற்றது. ‘மனப்பாங்கு மாற்றமும் ஆற்றல் விருத்தியும்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த செயலமர்வுகளில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கல்வியற் துறை விரிவுரையாளர் ரட்ணம் சர்வேஸ்வரா விரிவுரையாளராக கலந்து கொண்டார்.
அத்துடன் ஒக்ரோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான ஐக்கிய தீபம் பத்திரிகையும் நிகழ்வின்போது வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















