மோதல்கள் காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நிலைமை சீரடைந்து விமான சேவைகள் மீண்டும் தொடங்கும் வரை தினமும் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை உணவு வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த முயற்சியை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் மற்றும் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவம் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.


















