இலங்கை, பங்களாதேஷ; மற்றும் மாலைதீவு உள்ளிட்ட அயல் நாடுகளிடமிருந்து விடுக்கப்பட்டுள்ள எரிபொருளுக்கான கோரிக்கைகளை ஆராய்ந்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை, குறிப்பாக அதன் அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு முக்கிய நாடாகும். வங்கதேசம் டீசல் விநியோகத்தை கோரியுள்ளதாகவும், இந்த விடயம் தற்போது பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2017 ஆம் ஆண்டு முதல் வங்கதேசத்திற்கான டீசல் ஏற்றுமதி பெரும்பாலும் தொடர்கிறது என்றாலும் இந்தியாவின் சுத்திகரிப்பு திறன், உள்நாட்டு தேவைகள் மற்றும் எரிபொருள் கிடைக்கும்
தன்மையைக் கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படும். இந்தியாவின் எரிசக்தித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இலங்கை மற்றும் மாலத்தீவுகளின் இதேபோன்ற கோரிக்கைகளும் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.


















