இந்தியாவில் நீட் மறுதேர்வு வரும் ஜூலை 2ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்வு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் டெலிகிராம் மெசேஜிங் செயலிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000ன் பிரிவு 69Aன் கீழ் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது.
வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பாதுகாப்பு கவலைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், தேர்வு முடியும் வரை தடை நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
















