நிதி மோசடிச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரான அனுத ஜனாதித் பண்டார உள்ளிட்ட 5 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேகநபர்களை இன்று (27) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபர்களை தலா 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத்தடையையும் விதித்துள்ளார்.
சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து 2 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பிலேயே, முன்னாள் அமைச்சரின் புதல்வர் உள்ளிட்ட குறித்த 5 சந்தேகநபர்களும் கடந்த 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















