பொத்துவிலிலிருந்து அம்பாந்தோட்டை வரையிலும், கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் உள்ள கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில்வரையிலும், கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகள் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்ற வீசுவதுடன் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, கடற்படை மற்றும் மீனவர்கள் இது குறித்து எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.


















