2029 இல் பிரதமர் வேட்பாளர் தவெக தலைவர் விஜய் தான் என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ கனிமொழி கூறினார்.
தமிழக சட்டமன்றத்திற்கு இன்று (02) வருகை தந்த தவெக எம்.எல்.ஏ. கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
“2029 ஆம் ஆண்டில் பிரதமர் யார் என்பதை முடிவு செய்வது தான் முக்கியமான விஷயம். ஆனால் இந்த முறை பிரதமரை டெல்லியில் இருந்து முடிவு செய்யப்போவதில்லை. தமிழ்நாட்டில் இருந்துதான் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யப்போகிறார்கள். 2029 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு மிகப்பெரிய மாற்றத்தை கண்டிப்பாக பார்க்கும்.
நமது தலைவர் விஜய்யை முதலமைச்சர் பதவியில் அமர வைத்ததே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான். அவரே நமது தலைவரின் கையை பிடித்து 2029 இல் பிரதமர் பதவியில் அமர வைப்பார். 2025 இல் கணித்தது 2026 இல் நடந்தது. அதேபோல் 2029 ஆம் ஆண்டும் நடக்கும்” என்று கனிமொழி தெரிவித்தார்.


















