பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட வட மாகாணத்தில் உள்ள காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
காணிப் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனுக்கும், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும் இடையே நடந்த விவாதத்தின்போது கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தொடர்பாக யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

















